search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செம்பட்டி விபத்து"

    செம்பட்டி அருகே பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சின்னாளபட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகில் உள்ள கதிரிபட்டியை சேர்ந்த ஏழுமலை மகன் ராமசாமி (வயது36). விவசாய கூலி தொழிலாளி. இவரும் இவரது நண்பரும் நேற்று இரவு மது குடிக்க ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இன்று அதிகாலை மணல் மேடு பகுதியில் ராமசாமியும் அவரது நண்பரும் ரத்த காயங்களுடன் சாலையோரம் கிடந்தனர். அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் சேதம் அடைந்திருந்தது.

    இது குறித்து செம்பட்டி போலீசாருக்கு பொதுமக்கள் புகார் அளித்தனர். போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் 2 பேரையும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ராமசாமி ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. அவரது நண்பர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார். குடிபோதையில் அதிக வேகத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றதால் விபத்து நடந்திருந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    ×